உன்னோட அவசரத்துக்குலாம் போக முடியாது; பொறுமையா தான் போவோம் - பேருந்தை வழிமறித்து மிரட்டிய யானை

உன்னோட அவசரத்துக்குலாம் போக முடியாது; பொறுமையா தான் போவோம் - பேருந்தை வழிமறித்து மிரட்டிய யானை

Published : Nov 29, 2023, 01:40 PM IST

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை பேருந்தில் இருந்தவர்களை மிரட்டும் வகையில் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய அரசு பேருந்து கெத்தை முள்ளி வெள்ளியங்காடு மார்க்கமாக நாள்தோறும் சென்று வருகிறது. இன்று காலை கோவை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து கெத்தை அருகே சென்ற பொழுது சாலையில் குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் நின்றது. 

இதனை கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். கடைசியில் சென்ற ஆண் யானை பேருந்தை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது. இதனை பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் பயத்தில் பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டார். ஆனாலும் அந்த யானை மீண்டும் திரும்பிப் பார்த்த வாரே மிரட்டிய வண்ணமே சென்றது. இதனை பேருந்தில் பயணித்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்