நீலகிரியில் செல்பி எடுக்க முயன்ற பயணிகளை தலை தெறிக்க ஓடவிட்ட காட்டு யானை

Apr 18, 2023, 3:13 PM IST

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனப்பகுதி, தெப்பக்காடு பகுதிகளில் வனவிலங்குகள் அவ்வபோது சாலை ஓரங்களில் உணவு தேடி வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஒற்றை காட்டு யானை ஒன்று இன்று சாலை ஓரத்தில் புற்களை மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் கார்களில் இருந்தபடி யானையுடன் செல்பி எடுக்க முற்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை திடீரென அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்து அவசர அவசரமாக வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.