ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் வந்தால், கோயிலில் கூட்ட நெரிசல், பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதால் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின்போது கோவிலுக்குள் பக்தர்கள் முன்பதிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுவது வழக்கம். பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1,100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி டிக்கெட் வழங்கப்படும். ஆன்லைனில் உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.