மாணவர்களுக்கான கலைத்திருவிழா
இதே போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் மாணவ, மாணவிகளில் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியானது நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மாணவ,மாணவிகளுக்கு பரதநாட்டியம், சிலம்பம் சுற்றுதல், நாட்டுப் புறப்பாடல், பலகுரல் பேச்சு, மாறு வேட போட்டி, கதை சொல்லுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.