நீலகிரியில் எருமை மாட்டை கடித்து தின்ற செந்நாய்! பீதியில் மக்கள்! வனத்துறையினர் ஆய்வு!

நீலகிரியில் எருமை மாட்டை கடித்து தின்ற செந்நாய்! பீதியில் மக்கள்! வனத்துறையினர் ஆய்வு!

Published : Feb 23, 2023, 11:49 AM IST

கூடலூர் அருகே எருமை மாட்டை கடித்து குதறிய செந்நாயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். செந்நாயை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல இடங்களில் புலி மற்றும் சிறுத்தைகள் செந்நாய்கள் போன்றவை வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்வதும் மனிதர்களை தாக்குவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

கூடலூர் அருகே உள்ள உப்பட்டி சேலைக்குன்னா பகுதியில் (5) வயது மதிக்கதக்க வளப்பு எருமை மாட்டினை செந்நாய்கள் கடித்து கொன்று தின்றுவிட்டதாக எருமை மாட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வனச்சரகர் ரவி மற்றும் வனவர் பெலிக்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செந்நாய் கூட்டம் கடித்து தின்றது உறு செய்ப்பட்டது. பின்பு கால்நடை மருத்துவர் ராஜராஜன் வரவழைக்கப்பட்டு பரிசோதனைக்கு பிறகு எருமை மாட்டின் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர். செந்நாய் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட வனத்துறையில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்