நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா

நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா

Published : Jan 17, 2024, 10:36 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற யானை பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகத்தில் உள்ள தமிழர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறையினர்  மற்றும் பழங்குடியினர் மக்களால் பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. 

இந்த பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் உறியடித்தல் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு  யானைகளுக்கு மிகவும் பிடித்த பொங்கல், அண்ணாச்சி, கரும்பு, தேங்காய் போன்ற பழங்களுடன் உணவு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உட்பட அனைவருக்கும் வனத்துறை சார்பில் பொங்கல் வழங்கப்பட்டது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்