தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

தாயின் கல்லறையை மணமேடையாக்கிய இளைஞன்; மகனின் செயலால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Published : Feb 23, 2024, 01:03 PM IST

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது உயிரிழந்த தாயின் கல்லறை முன்பாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் வசித்து வரும் முருகன் மற்றும் ஈஸ்வரி தம்பதியின் மகன் தினேஷ் குமார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  தினேஷ்குமாரின் அம்மாவான ஈஸ்வரி உடல்நல குறைவால் காலமானார். உயிரிழந்த அம்மாவின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அம்மாவின் நினைவாக மணிமண்டபம் கட்டி தெய்வமாக வழிபட்டு வந்தார். 

தனது மகனுக்கு ஊர்கூடி திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஈஸ்வரி ஆசை நிறைவேறும் முன்பாக இயற்கை எய்தினார். தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய தினேஷ் குமார் தாயின் கல்லறையிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதை நிறைவேற்றும் விதமாக தினேஷ்குமாருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில்  தினேஷ்குமாருக்கு  மதுரையைச்  கண்ணன் மற்றும் விஜி தம்பதிகளின் மகளான காயத்ரி என்ற பெண்ணுடன் அம்மாவின் கல்லறை முன்பு திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Nagercoil Kasi Harassment Case : கையாலேயே ஆர்ட் விட்ட காசியின் தற்போதைய பரிதாப நிலைமை!
00:54Madurai Crime News: தூங்காநகரை அலறவிடும் போதை இளைஞர்கள்.. பகீர் வீடியோ!
01:18Madurai Viral Video: அரசு அலுவலகத்தை பாராகவே மாற்றிய பொறியாளர்கள்; அலுவலக பணியை தவிற மற்ற அனைத்தும் படுஜோர்
00:38சட்டமன்ற நிகழ்ச்சியை பார்க்க முதல்முறையாக விமானத்தில் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள்; மாணவர்கள் ஹேப்பி
01:56FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை
01:28Viral Video: மதுரையில் கறியை தூக்கிக் கொண்டு ஓட்டம்; தெரு நாயை சேஸ் செய்து கறியை பொறுக்கி வந்த கடை ஊழியர்
04:10ஓபிஎஸ்ஸுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா.? சிரிச்சிகிட்டே பதில் சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அதுதான். !!
05:06TN Rain : தூத்துக்குடி.. மதுரை.. கொட்டித்தீர்த்த பேய் மழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள் - மக்கள் அவதி! Video!
01:38உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
03:13மதுரையில் பெய்த கனமழை.. மின்வயர் அறுந்து தொங்கியதில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி..
Read more