Watch : ராகுல்காந்தி பதவி பறிப்பு! எதிரியின் வாள் பறிக்கப்பட்டது - வைரமுத்து கருத்து!

Mar 27, 2023, 4:06 PM IST

மதுரையில், வைகை இலக்கியத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரையாற்றினார்.

மதுரை மாவட்டம் உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை, நூலகத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

பின்னர், செய்தியாளர்களிம் பேசிய அவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார். எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் வாள் பறிக்கப்பட கூடாது, களம் மறுக்கப்பட கூடாது என்றும் தெரிவித்தார்.