இனியும் இயக்க முடியாது; பழுதடைந்த அரசுப்பேருந்த RTO அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்

இனியும் இயக்க முடியாது; பழுதடைந்த அரசுப்பேருந்த RTO அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்

Published : Jul 20, 2023, 10:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசுப்பேருந்தை சரி செய்யாமல் தொடர்ந்து அதே பேருந்தை இயக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக கூறி பேருந்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விட்டுச்சென்ற ஓட்டுநரால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கென்னடி. அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இயக்கும் அரசுப் பேருந்து சரியாக பிரேக் பிடிக்காமல், முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஓட்டுநர் கென்னடி அதிகாரிகளிடம் பேருந்தின் நிலை குறித்து எடுத்துக் கூறி பிரச்சினைகளை சரிசெய்து தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், அதனை கண்டுகொள்ளாத போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என திமிராக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலடைந்த ஓட்டுநர் இறுதியாக நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு பேருந்தை எடுத்துச் சென்று பேருந்து இயக்க முடியாத நிலையில் உள்ளது.

ஆனால், அதிகாரிகள் இதனை இயக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நீங்களே பேருந்தை இயக்கிப் பார்த் முறையான பராமரிப்பில் உள்ளதா? பேருந்தை இயக்கலாமா என்று கூறுங்கள் என அலுவலகத்திலேயே பேருந்தை விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்