மழையையும் பொருட்படுத்தாமல் நடவு செய்த விவசாயிகள்; மின்னல் தாக்கி ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

மழையையும் பொருட்படுத்தாமல் நடவு செய்த விவசாயிகள்; மின்னல் தாக்கி ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

Published : Nov 07, 2023, 10:55 AM IST

கன்னாயகுமரி மாவட்டத்தில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மணவாளக்குறிச்சியில் பெரிய குளம் பகுதியில் நெல் வயல்களில் விவசாயிகள் மழையையும் பொருட்படுத்தாமல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது இடி, மின்னல் தாக்கியதில் சபரி ராஜா என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் நெல் வயலில் பணியாற்றிக் கொண்டிருந்த நேசபாய், செல்லத்துரை, செல்லப்பன், பிரபாகரன், தவசலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரும் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றவர்களை நலம் விசாரித்தார். மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

01:09Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா
03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்
Read more