ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில், அம்பு காணிக்கை! அதற்கு முன்னதாக காஞ்சிபுரம் வந்த பக்தர்கள்!

ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில், அம்பு காணிக்கை! அதற்கு முன்னதாக காஞ்சிபுரம் வந்த பக்தர்கள்!

Published : May 22, 2024, 11:31 AM ISTUpdated : May 22, 2024, 11:38 AM IST

ஆந்திர மாநில பக்தர்கள் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியனவற்றை காணிக்கையாக செலுத்தவுள்ளனர். 

ஆந்திர மாநில பக்தர்கள் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியனவற்றை காணிக்கையாக செலுத்தவுள்ளனர். அவர்கள் காணிக்கையாக செலுத்துவதற்கு முன்பாக காஞ்சிபுரம் வந்து சங்கர மட வளாகத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து சிறப்பு வழிபாடுகளையும் செய்தனர். 

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றை மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்து ஆந்திர மாநில பக்தர்களிடம் வழங்கினார். பின்னர் ஆந்திர மாநில பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருளாசி வழங்கினார்.

இதனையடுத்து வெள்ளி வில்லும், அம்பும் அயோத்தி கோயிலுக்கு ஆந்திர மாநில பக்தர்களால் எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,  நிர்வாகிகள் ஜானகிராமன், கீர்த்திவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

32300:00IPL-லும்.. அதிமுகவும் ஒன்னு தான்.. ஒபிஸ்.. இபிஸ்.. தீபா என்று பல அணிகள் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்!
06:16"புதிய விமான நிலையம்" மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாத அரசு; வயலில் இறங்கிய கிராம மக்கள்
00:46காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்
02:59காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்மலாசீதாராமன் சிறப்பு வழிபாடு
01:51அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க போக்குவரத்து கழகம் புது முயற்சி
4283:20நாட்டிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே நபர் எங்கள் முதல்வர் - காஞ்சியில் ரோஜா பெருமிதம்
00:38புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
02:02திடீரென கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து; ஆவேசமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள்
01:57காஞ்சிபுரத்தில் மாடு மீது மோதி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு; 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி