Viral Video : கடையில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு! - 4 பெண் போலீஸ் பணியிடை நீக்கம்!

Viral Video : கடையில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு! - 4 பெண் போலீஸ் பணியிடை நீக்கம்!

Published : Jun 07, 2023, 03:37 PM IST

படப்பை அருகே கடையில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர், டிரைவர் உள்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடையில் சாக்லேட், பிரட் ஆம்லெட் , ஜூஸ் போன்றவற்றை மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு காசுகொடுக்க மறுத்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவல்நிலைய ஜீப் ஓட்டுநர் பெண் காவலர் ஜெயமாலா, மற்றும் இரண்டு ஏஆர் பெண் காவலர்கள் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தாம்பரம் அடுத்த படப்பை ஜூஸ் கடையில் பணியில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவதும், கடையின் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஓசியில் ஜூஸ் கேட்டு மிரட்டுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தாம்பரம் காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

02:45ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில், அம்பு காணிக்கை! அதற்கு முன்னதாக காஞ்சிபுரம் வந்த பக்தர்கள்!
32300:00IPL-லும்.. அதிமுகவும் ஒன்னு தான்.. ஒபிஸ்.. இபிஸ்.. தீபா என்று பல அணிகள் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்!
06:16"புதிய விமான நிலையம்" மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாத அரசு; வயலில் இறங்கிய கிராம மக்கள்
00:46காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்
02:59காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்மலாசீதாராமன் சிறப்பு வழிபாடு
01:51அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க போக்குவரத்து கழகம் புது முயற்சி
4283:20நாட்டிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே நபர் எங்கள் முதல்வர் - காஞ்சியில் ரோஜா பெருமிதம்
00:38புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
02:02திடீரென கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து; ஆவேசமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள்
01:57காஞ்சிபுரத்தில் மாடு மீது மோதி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு; 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி