புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published : Dec 04, 2023, 10:06 AM IST

தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து  சாலையில் விழுந்ததால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இன்று விடுமுறை அளித்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் ஒன்று முறிந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்கின்ற தனியார் நிறுவனத்தின் பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள்  மாற்றுப் பாதையில்  திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

32300:00IPL-லும்.. அதிமுகவும் ஒன்னு தான்.. ஒபிஸ்.. இபிஸ்.. தீபா என்று பல அணிகள் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்!
06:16"புதிய விமான நிலையம்" மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாத அரசு; வயலில் இறங்கிய கிராம மக்கள்
00:46காஞ்சிபுரத்தில் இருந்தபடி அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதை பார்த்து மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்
02:59காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்மலாசீதாராமன் சிறப்பு வழிபாடு
01:51அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க போக்குவரத்து கழகம் புது முயற்சி
4283:20நாட்டிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே நபர் எங்கள் முதல்வர் - காஞ்சியில் ரோஜா பெருமிதம்
00:38புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
02:02திடீரென கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து; ஆவேசமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள்
01:57காஞ்சிபுரத்தில் மாடு மீது மோதி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு; 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
Read more