
அதிமுக கட்சி நிர்வாகிகளைத் தான் சந்தித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர், "நான் இப்போது ரொம்ப நிதானமாக, பொறுமையாக, அமைதியாக உள்ளேன்; நிர்வாகிகளின் கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "என்றென்றும் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தான் எனது அரசியல் பயணம் தொடரும்" என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.