
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 68ஆவது வட்டம் ஜவஹர் நகர் சந்திரசேகர் சாலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பழமையான வேப்பமரம் திடீரென சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உடனேயே கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து, சாலையில் விழுந்திருந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.