மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

12:14 AM (IST) Mar 05
திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக் கூட உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
11:47 PM (IST) Mar 04
சட்டம் ஒழுங்கைக் கெடுக்கின்றவர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11:06 PM (IST) Mar 04
கேரளாவில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை இந்திய மாணவர் கூட்டமைப்பு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:43 PM (IST) Mar 04
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற போலியான செய்தியை வெளியிட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10:43 PM (IST) Mar 04
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற போலியான செய்தியை வெளியிட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10:05 PM (IST) Mar 04
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பீகார் குழு தெரிவித்துள்ளது.
08:40 PM (IST) Mar 04
197 நாடுகளின் கொடிகளை 4 நிமிடத்தில் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை படைத்துள்ளது தமிழக குழந்தை.
07:38 PM (IST) Mar 04
வாழ்வாதார உரிமைகளைப் பெற தொல்தமிழ் குறவர்குடி மக்களுக்குத் தங்கு தடையின்றிக் குடிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
07:24 PM (IST) Mar 04
தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. - டிடிவி தினகரன்.
05:57 PM (IST) Mar 04
உலக அளவில் இந்தியாவை இழிவுபடுத்த சதியா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ஜெனிவாவில் இருந்து வந்த இந்திய மாணவர் ஒருவரின் வீடியோ. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
05:40 PM (IST) Mar 04
லேப் டெக்னீஷியன் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
01:20 PM (IST) Mar 04
உண்மையிலேயே வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிய ஏசியாநெட் தமிழ் சார்பில் இன்று நேரடியாக களத்தில் இறங்கி, வடமாநிலத்தினர்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. அதன் வீடியோ இதோ
12:11 PM (IST) Mar 04
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது என மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
11:06 AM (IST) Mar 04
பொன்னியின் செல்வன் படம் பார்க்க குதிரையில் வந்ததுபோல், பத்து தல படம் பார்க்க ஹெலிகாப்டரில் வரும் ஐடியாவில் இருப்பதாக கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
09:38 AM (IST) Mar 04
மீசை ராஜேந்திரன், முத்துக்காளை என ஏராளமான நடிகர்கள் அண்மையில் வடிவேலு குறித்து மனம்திறந்து பேசிய நிலையில், தற்போது நடிகர் சிசர் மனோகர் வடிவேலுவை கவுண்டமணி மிதித்த சம்பவம் குறித்து பேசி உள்ளார். மேலும் படிக்க
09:37 AM (IST) Mar 04
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
08:41 AM (IST) Mar 04
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் சென்ற வாரம் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் இல்லத்திற்கு இன்று வருகை புரியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகைக்காக தொண்டர்கள் மற்றும் பிரபுவின் உறவினர்கள் அவரின் வீட்டின் முன்பு இன்று காலை முதலே அண்ணாமலையின் வருகையை எதிர்பார்த்து உள்ளனர். அவரின் அண்ணன் அடிதடி சம்பவத்தில் அடிபட்டு காயத்துடன் இல்லத்தில் உள்ளார்.
08:39 AM (IST) Mar 04
வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா, தான் நடித்த படம் பிளாப் ஆனதால் சம்பளம் வாங்க மறுத்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க
08:35 AM (IST) Mar 04
பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
08:34 AM (IST) Mar 04
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், மாங்காடு, மாதவரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:28 AM (IST) Mar 04
அடித்து வைத்துள்ள பணத்தை கொண்டு பொதுக்குழு ஆடுகளை கொள்முதல் செய்ய முடியுமே தவிர பொதுமக்களை வாங்க முடியாது என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டு தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.