காதலியை பாக்க சினிமா பாணியில் பொம்பள வேஷம்… இளைஞரை பிரிச்சு மேய்ஞ்ச ஊர் மக்கள்…

By manimegalai aFirst Published Oct 20, 2021, 9:16 AM IST
Highlights

தமது காதலியை பார்க்க பெண் வேடமிட்டு போன நபரை பொதுமக்கள் நைய புடைத்துள்ளனர்.

தமது காதலியை பார்க்க பெண் வேடமிட்டு போன நபரை பொதுமக்கள் நைய புடைத்துள்ளனர்.

காதல் என்பது அளவில்லாதது… அதனால் தான் என்னவே அளவுக்கு அதிகமான அன்பு பீறிடும் போது மூளை வேலை செய்யாமல் முரண்டு பிடித்து எக்குதப்பான காரியங்களை காதலர்கள் செய்வர்.

அதிலும் யாருக்கும் தெரியாமல் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொள்ளும் நிகழ்வு எல்லா இடத்திலும் நடப்பது ஒன்று. ஆனால் வேலூரில் தமது காதலியை பார்க்க பெண் வேடமிட்டு போய் தொக்காய் மாட்டி இருக்கிறார்.

காதல் மிகுதியால் வேலூர் மாவட்டத்தில் இளைஞர் தமது காதலியை சந்திக்க சென்றிருக்கிறார். அதுவும் எப்படி பெண் வேடமிட்டு… அப்படி போனவரை கண்ட ஊர்மக்கள் திருடன் இப்படி வேஷமிட்டு வந்துள்ளான் என்று நினைத்து துரத்தி பிடித்தனர்.

அத்தோடு விட்டாலாவது பரவாயில்லை… கம்பத்தில் கட்டி வைத்து உரிச்சு எடுத்துள்ளனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த நபரிடம் விசாரணை நடத்திய போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர்.

காரணம்… சிக்கிய நபருக்கு கல்யாணமாகி 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இது போதாது என்று 19 வயது காதலியுடன் சுற்றி திரிந்து இப்போது பெண் வேடமிட்டு மாட்டி உள்ளார்.

click me!