Tamil News Live Updates: வானிலை ஆய்வு மையம் கணிப்பை விட அதிக மழை.. முதலமைச்சர் ஸ்டாலின்

தென்மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது. பிரதமரை சந்தித்த பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செல்கிறேன் என  முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

4:15 PM

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது

 

4:06 PM

கூடுதல் ஹெலிகாப்டர் கேட்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!

I request Honourable to urgently deploy more helicopters for rescue and relief in Tamil Nadu's southern districts, severely affected by unprecedented rainfall. pic.twitter.com/aBTUgLTYQQ

— M.K.Stalin (@mkstalin)

3:56 PM

சதம் அடித்த எம்.பி.க்கள் இடை நீக்கம்: அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம்!

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களின் இடைநீக்க எண்ணிக்கை 100ஐ கடந்தது

 

3:01 PM

பிரதமர் முத்ரா திட்டம்: மொத்த கடனில் 69 சதவீதம் பெண்களுக்கு - மத்திய அரசு!

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.44.46 கோடி மொத்தக் கடன்களில் 69 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

1:21 PM

விவசாயம் செய்வது முதல் மான் வேட்டை வரை... அமெரிக்காவில் நெப்போலியனின் 300 ஏக்கர் தோட்டத்தில் இவ்வளவு வசதிகளா!

அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியன்-னுக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய தோட்டத்துக்கு பிரபல யூடியூபர் முகமது இர்பான் சென்று அங்குள்ள வசதிகளை பற்றி கூறி இருக்கிறார்.

12:25 PM

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு: டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்லும் முதல்வர் ஸ்டாலின்!

தென் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

12:24 PM

வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை: முதல்வர் ஸ்டாலின்!

தென் மாவட்டங்களில் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை  சற்று தாமதமாக கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

11:56 AM

வானிலை ஆய்வு மையம் கணிப்பை விட அதிக மழை... முதலமைச்சர் ஸ்டாலின்

தென்மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது. பிரதமரை சந்தித்த பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செல்கிறேன் என  முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

11:25 AM

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கு.. அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. தண்டனை என்ன?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து  குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

11:10 AM

குளிர்காலத்தில் வீடற்றவர்களின் மரணங்கள்: விசாரிக்க குழு அமைத்த டெல்லி அரசு!

டெல்லியில் குளிர்காலத்தில் வீடற்றவர்களின் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது

 

11:10 AM

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ளவில்லை!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

 

10:51 AM

அமைச்சர் துரைமுருகனுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

10:32 AM

Today Gold Rate in Chennai : மீண்டும் எகிறியதா தங்கம் விலை? இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:50 AM

காங்கிரஸின் பொது நிதி திரட்டும் திட்டம்: 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி வசூல்!

பொது நிதி திரட்டும் திட்டத்தின் மூலம் 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

 

9:24 AM

ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது!

ஸ்ரீவைகுண்டத்தில், கனமழை காரணமாக சென்னை நோக்கி வந்த ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது

 

9:15 AM

Tamilnadu weatherman: மீண்டும் தென் மாவட்டங்களை மிரட்ட போகுதா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

9:14 AM

5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும்  23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை பின்னர்  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9:02 AM

காட்டாற்று வெள்ளத்தில் நெல்லை பேருந்து நிலையம்!!

Junction Bus Stand pic.twitter.com/5IvhwWOwT5

— Thinakaran Rajamani (@thinak_)

8:50 AM

ஹனிமூன் கொண்டாட காதலர்களின் கனவு தேசத்துக்கு சென்ற ராதா மகள் கார்த்திகா நாயர் - வைரலாகும் போட்டோஸ்

நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

8:16 AM

மழை நிற்கட்டும்! வெள்ளம் வடியட்டும் என்று காத்திராமல் களத்தில் இறங்குங்கள் தொண்டர்களே! கிருஷ்ணசாமி உத்தரவு!

தென்மாவட்டங்களில் அபரிமிதமான மழை – வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார். 

8:10 AM

பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்

மழை மீட்பு பணிகள், வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.

7:57 AM

திருநெல்வேலி, தூத்துக்குடி.. கனமழை எதிரொலி.. 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து - தென்னக ரயில்வே!

Trains Cancelled : தென் மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட ரயில்களை இன்று ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

7:42 AM

ரயிலில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் புறப்பட்டது

ஸ்ரீவைகுண்டம் அருகே சிக்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க ராணுவ புறப்பட்ட ஹெலிகாப்டர் புறப்பட்டது. ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கு உணவு அளித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

7:34 AM

DMK Youth Wing: வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்.. திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு..!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

7:33 AM

School Leave: விடாமல் ஊத்தும் கனமழை.. தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறி வந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:30 AM

சென்னையில் 577வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 577வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

4:15 PM IST:

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது

 

4:06 PM IST:

I request Honourable to urgently deploy more helicopters for rescue and relief in Tamil Nadu's southern districts, severely affected by unprecedented rainfall. pic.twitter.com/aBTUgLTYQQ

— M.K.Stalin (@mkstalin)

3:56 PM IST:

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களின் இடைநீக்க எண்ணிக்கை 100ஐ கடந்தது

 

3:01 PM IST:

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.44.46 கோடி மொத்தக் கடன்களில் 69 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

1:21 PM IST:

அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியன்-னுக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய தோட்டத்துக்கு பிரபல யூடியூபர் முகமது இர்பான் சென்று அங்குள்ள வசதிகளை பற்றி கூறி இருக்கிறார்.

12:25 PM IST:

தென் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

12:24 PM IST:

தென் மாவட்டங்களில் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை  சற்று தாமதமாக கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

11:56 AM IST:

தென்மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது. பிரதமரை சந்தித்த பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செல்கிறேன் என  முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

11:25 AM IST:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து  குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

11:10 AM IST:

டெல்லியில் குளிர்காலத்தில் வீடற்றவர்களின் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது

 

11:10 AM IST:

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

 

10:51 AM IST:

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

10:32 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:50 AM IST:

பொது நிதி திரட்டும் திட்டத்தின் மூலம் 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

 

9:24 AM IST:

ஸ்ரீவைகுண்டத்தில், கனமழை காரணமாக சென்னை நோக்கி வந்த ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது

 

9:15 AM IST:

தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

9:14 AM IST:

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும்  23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை பின்னர்  வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9:02 AM IST:

Junction Bus Stand pic.twitter.com/5IvhwWOwT5

— Thinakaran Rajamani (@thinak_)

8:50 AM IST:

நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

8:16 AM IST:

தென்மாவட்டங்களில் அபரிமிதமான மழை – வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார். 

8:10 AM IST:

மழை மீட்பு பணிகள், வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.

7:57 AM IST:

Trains Cancelled : தென் மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட ரயில்களை இன்று ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

7:42 AM IST:

ஸ்ரீவைகுண்டம் அருகே சிக்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க ராணுவ புறப்பட்ட ஹெலிகாப்டர் புறப்பட்டது. ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கு உணவு அளித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

7:34 AM IST:

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

7:33 AM IST:

வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறி வந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:30 AM IST:

சென்னையில் 577வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.