- Home
- Gallery
- Tamilnadu weatherman: மீண்டும் தென் மாவட்டங்களை மிரட்ட போகுதா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Tamilnadu weatherman: மீண்டும் தென் மாவட்டங்களை மிரட்ட போகுதா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Rain
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதனால் சாலைகளில் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வீடுகளுக்குள் வெள்ள புகுந்ததால்
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain
தற்போது மழை குறைந்ததை அடுத்து வெள்ள நீர் மெல்ல மெல்ல வடிந்து வருவதால் மீட்பு நடவடிக்கைகளும் துரிதப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாக கூறிய நிலையில் பொதுமக்கள் பீதியில் இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியதால் இனி முக்கியப் பணியாக நிவாரணத்தை தொடரலாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
tamil nadu weatherman
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க;- School Leave: விடாமல் ஊத்தும் கனமழை.. தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!
Chennai rain
இனி முக்கியப் பணியாக நிவாரணத்தை தொடரலாம். இன்று தேவாரண்யம், கோடியக்கரை முதல் ராமேஸ்வரம் வரை மழை பெய்ய வாய்யுள்ளது. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளார்.