தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், “எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை; யாருக்கும் நாங்கள் ஆதரவு தருவதும் இல்லை” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் இன்று (மே 8) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் ஒரே எம்எல்ஏ போஜராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்று கூறினார். அதிமுக-திமுக இணைந்து ஆட்சியமைக்கலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், பாஜக தரப்பின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.