
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது எனவும், ஆட்சிக்கு முன்பே ஒன்றுமையாக இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆன்மீகம் மற்றும் சுற்றுலா என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி குறியீடுகளை எட்டியுள்ளதால், மக்கள் மீண்டும் இந்த ஆட்சிக்கே வாக்களிப்பார்கள் என்ற தெரிவித்தார்.