Published : Feb 27, 2023, 06:44 AM ISTUpdated : Feb 28, 2023, 12:23 AM IST

Erode East by Elections 2023 Live: Exit polls 2023: திரிபுராவில் பாஜக முன்னணி!!

சுருக்கம்

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில்  திரிபுராவில் பாஜக 36 முதல் 45 இடங்களிலும், கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11இடங்களிலும், டிஎம்பி 9 முதல் 16 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது 

Erode East by Elections 2023 Live: Exit polls 2023: திரிபுராவில் பாஜக முன்னணி!!

12:23 AM (IST) Feb 28

Mosquito : உங்கள் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருக்கா.? கிராம்பு, எலுமிச்சை மட்டும் போதும்.!!

தற்போது உள்ள சூழலில் பல்வேறு நோய்களால் மனிதர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கொசுக்கள் பரப்பும் நோய்களால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை எப்படி ஒழிப்பது என்பதை இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

11:51 PM (IST) Feb 27

ChatGPTயாவது.. AIயாவது.! எப்பவுமே இதுதான் மேல இருக்கு - Infosys நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்ன குட்டி ஸ்டோரி

மனிதர்கள் செய்யும் வேலைகளை சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொள்ள முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி.

மேலும் படிக்க

11:17 PM (IST) Feb 27

கட்டாயத் தமிழ் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதும்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (TNPSC Group 2) தேர்வில் குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க

10:25 PM (IST) Feb 27

மார்ச் 20ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு !!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, அடுத்த மாதம் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அறிவித்துள்ளார் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு.

மேலும் படிக்க

10:03 PM (IST) Feb 27

9 மணியை கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

09:24 PM (IST) Feb 27

Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற சூழலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

08:07 PM (IST) Feb 27

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் நடிகை குஷ்பு.. வாழ்த்து தெரிவித்த சீமான் !!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு அவர்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் சீமான்.

மேலும் படிக்க

07:35 PM (IST) Feb 27

Exit Polls results 2023: நாகாலாந்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு!!

மாட்ரைஸ் மற்றும் ஜீ நியூஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நாகாலாந்து மாநிலத்தில் தேசிய முற்போக்குக் கூட்டணி 39 இடங்களிலும், என்டிஎப் 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மற்றவர்கள் 16 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க

07:32 PM (IST) Feb 27

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக 2வது முறை பதவியேற்கும் தமிழர் - யார் இந்த ம.வெங்கடேசன்.?

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழகத்தைச் சார்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் படிக்க

07:32 PM (IST) Feb 27

Exit Polls Results 2023: மேகாலயாவில் பாஜக கூட்டணி முன்னணி!!

மாட்ரைஸ் மற்றும் ஜீ நியூஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மேகாலயா சட்டமன்ற தேர்தலில் என்பிபி 24 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. இந்த மாநிலத்தில் பாஜக என்பிபி இணைந்து போட்டியிட்டன.

மேலும் படிக்க

07:30 PM (IST) Feb 27

Exit Polls Results 2023: திரிபுராவில் பாஜக முன்னணி

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில்  திரிபுராவில் பாஜக 36 முதல் 45 இடங்களிலும், கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11இடங்களிலும், டிஎம்பி 9 முதல் 16 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க
 

05:59 PM (IST) Feb 27

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் வி.லட்சுமிநாராயணன் !!

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்றார்.

மேலும் படிக்க

05:46 PM (IST) Feb 27

அசாமில் கிடந்த சென்னை பெண்ணின் சடலம்.. சாமி டாலரால் வசமாக சிக்கிய ராணுவ அதிகாரி - அதிர்ச்சி சம்பவம்

பஞ்சாபைச் சேர்ந்த இந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல், கவுகாத்தி அருகே சென்னையைச் சேர்ந்த தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

02:31 PM (IST) Feb 27

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுப்படையினர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய துணை ராணுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

01:54 PM (IST) Feb 27

ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ.4000 விநியோகம்.. அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு அன்னை சத்யா நகரில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ.4000 விநியோகம் செய்வதாக  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மீண்டும் புகார் அளித்துள்ளார். 

01:26 PM (IST) Feb 27

ஈரோடு இடைத்தேர்தல்.. 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி வரை நிலவரப்படி 44.56%  வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதுவரை 1,01,392 பேர் வாக்களித்துள்ளனர்.

11:33 AM (IST) Feb 27

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவாகியுள்ளது. இதுவரை 63,469 பேர் வாக்களித்துள்ளனர். 

11:27 AM (IST) Feb 27

எதிர் அணி இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திப்பார்கள் என்று ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.

11:27 AM (IST) Feb 27

25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.. தென்னரசு

தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அதுவும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார்.

09:56 AM (IST) Feb 27

அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கல்லுபிள்ளையார்கோவில் அருகே உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் தனது வாக்கை பதிவு செய்தார். 

09:35 AM (IST) Feb 27

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 9 மணி வரை 10.10% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி வரை 10.10% வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதுவரை 22,973 வாக்குகள் பதிவாகியுள்ளன. 238 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

09:22 AM (IST) Feb 27

விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசம்.! போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும்-தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்ததன் அடையாளமாக விரலில் வைக்கப்படும் மை யின் தரம் மோசமாக உள்ளதாகவும், இதன் காரணமாக அது போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க..

09:00 AM (IST) Feb 27

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். 

08:32 AM (IST) Feb 27

ஈரோடு அக்ரஹாரம் வாக்குச்சாவடி மையத்தில் சலசலப்பு

ஈரோடு தொகுததி இடைத்தேர்தலில் அக்ரஹாரம் வாக்குச்சாவடி மையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தேர்தல் ஆணையம் சொன்ன 12 விதமான அடையாள அட்டைகளை அனுமதிக்க வேண்டும் என வாக்காளர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

08:27 AM (IST) Feb 27

தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு..! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் காவல் நிலையம் எதிரே உள்ள வாக்கு சாவடியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டுடன் வாக்களிக்க வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க

08:01 AM (IST) Feb 27

ஈரோடு கிழக்கில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்..? இதுவரை வென்ற கட்சிகள் எது..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் என 77பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16,497 பேர் மூன்றாம் பாலினத்தினர் 25 பேர் மொத்தமாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். 

மேலும் படிக்க..

07:47 AM (IST) Feb 27

வரிசையில் நின்று வாக்களித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வரிசையில் நின்று வாக்களித்தார். 

07:41 AM (IST) Feb 27

கட்சி துண்டுடன் வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளருக்கு எதிர்ப்பு

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் காவல் நிலையம் எதிரே உள்ள வாக்கு சாவடியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டுடன் வாக்களிக்க வந்திருந்தார். அப்போது, கட்சி துண்டை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியதை அடுத்து கட்சி துண்டை அகற்றிவிட்டு வாக்களித்தார்.

07:30 AM (IST) Feb 27

ஈரோடு இடைத்தேர்தல்.. தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் வாக்களித்தார்.

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் காவல் நிலையம் எதிரே உள்ள வாக்கு சாவடியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களித்தார்.

07:21 AM (IST) Feb 27

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்களித்தார்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரியண்ண வீதி வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மேனகா வாக்களித்தார். 

07:07 AM (IST) Feb 27

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

07:04 AM (IST) Feb 27

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

06:53 AM (IST) Feb 27

ஈரோடு இடைத்தேர்தல்.. களத்தில் 77 வேட்பாளர்கள்.. முன்கூட்டியே நடந்த மாதிரி வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாதிரி  வாக்குப்பதிவு முன்கூட்டியே தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு வேட்பாளரின் சின்னத்திலும்   வாக்கு செலுத்த வேண்டுமெனில் கூடுதல் நேரம் ஆகும். எனவே மாதிரி   வாக்குப்பதிவினை காலை 5.30 மணிக்கு தொடங்கிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

06:52 AM (IST) Feb 27

ஈரோடு இடைத்தேர்தல்... பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. 

06:50 AM (IST) Feb 27

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்.. 7 மணிக்கு வாக்குப்பதிவு

நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


More Trending News