ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டனாகும் எல்லா தகுதியும் உண்டு: தினேஷ் கார்த்திக்!

Published : Jul 02, 2023, 09:46 AM IST
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டனாகும் எல்லா தகுதியும் உண்டு: தினேஷ் கார்த்திக்!

சுருக்கம்

இந்திய அணிக்கு கேப்டனாகும் அனைத்து தகுதியும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உண்டு என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாகும் அனைத்து தகுதிகளும் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உண்டு. ஆகையால், அவரை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பந்து வீச்சில் பல சாதனைகளை படைத்திருப்பவர் அஸ்வின்.

நா ரெடி பாடலுக்கு... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணி தங்களது பி அணியை அனுப்ப உள்ளதாக நான் அறிகிறேன். இதற்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட உள்ளது குறித்து தெரிந்து கொண்டேன்.

விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

ஒரு முறையாவது இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக வேண்டும். அதற்கான தகுதியும், உரிமையும் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை அஸ்வினுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பு உள்ள நிலையில், அவர் தான் விக்கெட் கீப்பராக செயல்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவும். இதனால், யாரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவும்.

பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4 கோல் அடித்து இந்தியா வெற்றி! இறுதிப் போட்டியில் குவைத்துடன் பலப்பரீட்சை!

என்னைப் பொறுத்தவரையில் கேஎல் ராகுலுக்கு தான் அதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைப் பற்றி நன்கு தெரியும். இவர்களது கூட்டணியில் இந்திய அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிதாபமாக வெளியேறிய 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!