இதனிடையே காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறும் வகையில் ஆதவ் அர்ஜூனா சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்டப் பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சி தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கருத்து இணையத்தில் வைரலான நிலையில் ஆதவ் அர்ஜூனா அந்தப் பதிவை நீக்கினார்.