சென்னை, கடலூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இது தொடர்பாக கோவை தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனமழை (Heavy Rain) பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை அன்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.