போட்டியில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிலையில், ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் கலங்கிய கண்களுடன் சாப்பிடத் தொடங்கினார். அவரை அழைத்து கேட்ட போது, எனது பெயர் கணேச மூர்த்தி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். வாடகை வாகனம் ஓட்டி பிழைப்பை நடத்தும் எனக்கு எனது மகனின் மருத்துவம் மற்றும் கல்வி செலவை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.