பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகளும் அதிகரிக்கும். என்வே இவற்றை தவிர்ப்பது நல்லது.
ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதற்கு பதிலாக, சிறுசிறு அளவில் பலமுறை உணவு உட்கொள்வது செரிமானத்தை எளிதாக்கும்.
அவசரமாக சாப்பிடுவது அதிக காற்று உள்ளிழுக்கப்பட்டு வாயு மற்றும் உப்புசத்தை ஏற்படுத்தும்.
உணவு உண்ட பிறகு சிறிது நேரம் நடப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும்.
இந்த எளிய உணவுகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவதன் மூலம், இந்த மழைக்காலத்தில் வீக்கம் மற்றும் நீர் தேக்க பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.