ரசாயனங்களை தள்ளி வைக்கலாம்!
பொதுவாக நாம் பாத்திரங்களை சுத்தப்படுத்தும் போது சோப்புகளை உபயோகம் செய்கிறோம். இந்த சோப்புகளில் உள்ள ரசாயனங்கள் நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை. நமது பாத்திரங்களில் அந்த ரசாயன எச்சங்கள் படிய வாய்ப்புள்ளது. வாழை இலையில் இயற்கையாகவே மெழுகு போன்ற படலம் காணப்படுகிறது. இதனால் உணவு அதன் மேற்பரப்பில் ஒட்டாமல் தடுக்கப்படுகிறது. வாழை இலைகளை நீரில் கழுவி மறுமுறை கூட பயப்படுத்த முடியும். உலோகம், கண்ணாடி தட்டுகளைவிட வாழை இலை மலிவானவை. இலைகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மறுபயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் தட்டுகளுடன் ஒப்பிடும்போது காகிதத் தட்டுகள் குறிப்பாக ஆரோக்கியமானவை. அதிலும் வாழை இலைகள் பதிலீடு செய்ய முடியாத நன்மைகளை தரக் கூடியவை. இனிமேல் பயன்படுத்த மறக்காதீங்க!