- கர்ப்ப காலத்தில் நடக்கும் போது மெதுவாகவும், நிதானமாகவும் நடக்கவும்.
- நடக்கும் போது சோர்வாக உணர்ந்தால் உடனே நடப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
- நீண்ட நேரம் நடந்தால் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லவும்.
- வெளியிடங்களில் நடக்கும் போது தனியாக நடக்க வேண்டாம். குழுவாக நடக்கவும். இது மன அழுத்தத்தை குறைக்கும்.
- நடக்கும்போது நடப்பயிற்சிக்கு ஏற்ற காலணிகள், ஆடைகளை அணியவும்.
- மலைப்பகுதியில், சறுக்கலான பகுதிகளில் நடக்க வேண்டாம்.
- கர்ப்பத்தின் இறுதி மாதத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். எனவே அந்தசமயத்தில் படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டாம்.
- நடைப்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி, கால் வீக்கம், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் உடனே நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.
- கர்ப்பகாலத்தில் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்றாலும், நடக்கும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.