Samantha : "அந்த அப்பாவி நாக சைதன்யாவை ஏன் ஏமாத்துனீங்க? சமந்தா கொடுத்த தரமான பதிலடி..

First Published Apr 10, 2024, 11:37 AM IST

அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏன் ஏமாத்துனீங்க? என்ற கேள்விக்கு சமந்தா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Samantha

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், 24, தெறி, இரும்புத்திரை என பல ஹிட் படங்களில் நடித்தார்.

குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், விஷால், முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்தார். தமிழில் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக இருந்த சமந்தா தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். 

இதனிடையே தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா அவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும் 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் சமந்தா. 

இந்த சூழலில் மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கா சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்காக நடிப்புக்கு இடைவெளி கொடுத்து ஓய்வெடுத்து வந்தார்.

இவர் கைவசம் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரீஸ் மட்டுமே உள்ளது. இந்த சீரிஸ் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குனர் அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம், சமந்தா சமூக வலைதளங்களில் ஆரோக்கியம் தொடர்பான பாட்காஸ்ட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகா வீடியோ ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ளார். தனது தினசரி வழக்கத்தில் யோகா எவ்வளவு முக்கியமானது? என்பதையும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் வீடியோவை ஒன்றை சமந்தா பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கை முறை குறித்து பாசிட்டிவ் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Samantha

ஆனால் நெட்டிசன் ஒருவர் சமந்தாவை சங்கடப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டுள்ளார். அந்த பயனர் “ ஏன் உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏமாற்றீனர்கள் என்பதை சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு சமந்தா தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதாவது அவரின் பதிவில் “ மன்னிக்கவும்.. இந்த நடைமுறைகள் (யோகா) உங்களுக்கு உதவாமல் போகலாம். உங்களுக்கு வலிமையான ஒன்று தேவைப்படலாம்.. நல்லா இருங்க..” என்று பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற ஹேட்டர்களுக்கு பதிலளித்து உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் எந்த விஷயமும் தெரியாமல் இதுபோன்ற கேள்விகளை எப்படி உங்களால் கேட்க முடிகிறது என்று சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய பயனருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

click me!