சென்னையில் பயங்கரம்! மனைவி மற்றும் குழந்தை கண் முன்னே வீடு புகுந்து ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.!

By vinoth kumarFirst Published May 16, 2024, 11:56 AM IST
Highlights

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து  மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

சென்னை சைதாப்பேட்டையில் மனைவி மற்றும் குழந்தையின் கண்முன்னே ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கௌதம்(27). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து  மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

Latest Videos

இதையும் படிங்க: திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்! வாழ்க்கையை நாசமாக்கிய லிவிங் டுகெதர்! நடத்தது என்ன?

ரத்த வெள்ளத்தில் சரிந்த கௌதம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக மனைவி தைசாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ  இடத்திற்கு விரைந்த போலீசார் கௌதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  Pensioners: மாத ஓய்வூதியம் பெறுபவரா நீங்கள்? அப்படினா இந்த செய்தி உங்களுக்கு தான்.!

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த கௌதமனின் மனைவி பிரியாவின் முதற்கணவரான ராஜ்கிரணுக்கும், கௌதமிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதையும் படிங்க: Tirumala Tirupati: திருப்பதி போற பிளான் இருக்கா? அப்படினா.. இதோ முக்கியமான செய்தி!

சைதாப்பேட்டையில் ரவுடி கெளதம் கொல்லப்பட்ட வழக்கில் பிரதீப், சுரேஷ், ராஜாபாய் ஆகியோர் சரணடைந்தனர். கொலை வழக்கில் சரணடைந்த 3 பேரும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜ்கிரண், சுகுமார், மணி ஆகியோரை சைதாப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!