ரசிகர்களை கவரும் கண்கள், வசீகரிக்கும் அழகு, மத்தாப் பூ சிரிப்பு என பார்த்ததுமே அனைவரையும் அழகில் மயக்கிய தேவதை தான் நடிகை சவுந்தர்யா. பெங்களூரை சேர்ந்த இவர், கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 1972 ஆம் ஆண்டு பிறந்த நடிகை சவுந்தர்யாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படவே, வாய்ப்பு தேட துவங்கினார்.
இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரவே, அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. அந்த சமயத்தில் சவுத்தர்யா கன்னடம், தமிழ், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வந்ததால் ஹிந்தி பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது.
தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'பொன்னுமணி' என்கிற படத்தில் அறிமுகமான சவுந்தர்யா, இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டார். குறிப்பாக இவர் நடித்த தவசி, சொக்கத்தங்கம் ,அருணாச்சலம், படையப்பா, சேனாதிபதி, காதலா காதலா, இவன், போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
ஊருக்கு தான் உபதேசம்! வாக்களிப்பதை விட தான் முக்கியமா? ஜோவை சுட்டி காட்டி சூர்யாவை விளாசும் நெட்டிசன்கள்!
திரைப்பட துறையைத் தாண்டி அரசியலிலும் கால் பதித்த நடிகை சவுந்தர்யா 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும் தன்னுடைய கட்சிக்கு வாக்கு சேகரிக்க தன்னுடைய சகோதரர் அமர்நாத்துடன் விமானத்தில் சென்றபோது, இவர் சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் வெடித்து சிதறியது. இதில் நடிகை சவுந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் இறப்பதற்கு முன்னர் கோடிக்கணக்கில் சொத்துக்கு அதிபதியாக இருந்த நிலையில், தன்னுடைய சொத்து குறித்து உயில் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வெளியான போது அதனை அவருடைய தாயார் மற்றும் கணவர் இரண்டு பேருமே மறுத்தனர். 31 வயதிலேயே அவர் எந்த உயிலும் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.