விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கிழக்கு வாசல்' சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் போதிலும்... டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் குறைவான புள்ளிகளை பெற்று வருவதாலும், கதாநாயகி விலகியதாலும் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகனாக வெங்கட் ரங்கநாதன் சண்முகம் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சிந்துஷாம், அருண்குமார் ராஜன், அஸ்வினி ராதாகிருஷ்ணா, பிரவீன் தேவசகாயம், ரோஜா ஸ்ரீ , ஆனந்தபாபு, போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியல் சுவாமி அப்பன் மற்றும் சிவகாமியின் வளர்ப்பு மகளான ரேணுகாவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்தது. மெக்கானிக்காக வேலை செய்து ஓய்வு பெற்ற சாமியப்பனுக்கு கோவிலில் கிடைக்கும் மகள் தான் ரேணுகா. இவரை தன்னுடைய வீட்டிற்கு தூக்கி வந்து சொந்த மகள் போல் வளர்க்கிறார். ஆனால் இவருடைய உண்மையான தாய் பாஞ்சாலி. சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு லாயர். பாஞ்சாலியின் காதலன் மூலம் பிறக்கும் இந்த குழந்தை அவரிடம் இருந்தால்... அவருக்கு வேறு ஒரு வாழ்க்கை அமைத்து தர முடியாது என எண்ணி அந்த குழந்தையை பிறந்த உடனேயே பிரித்து விடுகிறார்.
68 வயதில் இது தேவையா? பட விழாவில் நடிகை பிரியாமணியை தகாத முறையில் தொட்டு முகம் சுழிக்க வைத்த போனி கபூர்!
பாஞ்சாலியிடம் குழந்தை இறந்து விட்டதாக பொய் சொல்கிறார். ஒரு கட்டத்தில் பாஞ்சாலியின் குழந்தை தான் ரேணுகா என்கிற உண்மை பாஞ்சாலியின் அம்மாவுக்கு தெரிய வர, அதை யாரிடமும் சொல்லாமல் ரேணுகாவிடம் மட்டுமே சொல்லிவிட்டு அவர் மடியிலேயே உயிர் விடுகிறார்.
இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இன்னுமும் ரேணுகா இல்லாத குறையை நிவர்த்தி செய்ய இந்த சீரியல் அதிரடியாக பல மாற்றங்கள், மற்றும் புது கேரக்டர்கள் களமிறக்க பட்டனர். வெங்கட் ரங்கநாதனின் கதாபாத்திரம் டபுள் ஆக்சன் ஆக மாற்றப்பட்டது. எனினும் TRP-யில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததாலும், கதாநாயகி விலகியதாலும் தற்போது இந்த சீரியலை முடிக்க சீரியல் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.