விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'.. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 11-ஆம் தேதி) இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
Vijay Antony
செய்தியாளர் சந்திப்பில், விஜய் ஆண்டனி கலந்து கொண்டு பேசும் போது... குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக . அதே போல் குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும் என்கிற கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.
அதன்படி முதல் நாளே இப்படம் தமிழகத்தில் ரூ.1.5 கோடி முதல் 1.8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே இப்படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகவும், தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.