ஒரு வாரம்.. பாலகிருஷ்ணா என்னை இப்படி நடத்தினார்! விசித்ரா புகாரை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி கூறிய ஆச்சர்ய தகவல

First Published Jan 2, 2024, 4:30 PM IST

நடிகர் பாலகிருஷ்ணா பற்றி, டிஸ்கோ ஷாந்தி... பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில்,90-களில் பல படங்களில், கவர்ச்சி வேடத்தில் நடித்த பிரபல நடிகை விசித்ராவும் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடி வருகிறார்.
 

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை விசித்ரா பெற்று வருவதால், இந்த முறை இவர் கூட டைட்டில் வின்னராக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் அர்ச்சனா டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் நெட்டிசன்கள் பலர் கூறி வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 2 நிகச்சிக்கு பின்னர் தொடர்ந்து ஆண் போட்டியாளர்கள் டைட்டில் வின்னராக இருக்கும் நிலையில், இந்த முறை கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் வின்னராக இருக்க வேண்டும் என்பது... பலரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.

Rajinikanth: அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு!
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பூகம்பம் டாஸ்க் நடந்த போது, விசித்ரா ஷூட்டிங்கில் தான் சந்தித்த பிரச்சனை குறித்து பேசி இருந்தார். தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், நான் ரூமுக்கு செல்லாததால், தினமும் நான் தங்கி இருந்த அறையை அவருடைய ஆட்களை ஏவி தட்டச்சொல்லி தன்னை டார்ச்சர் செய்ததாக கூறினார். அந்த நேரத்தில் தன்னுடைய கணவர் ஷாஜி தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமில் தன்னை தங்க வைத்து சேப் செய்ததாகவும், இதன் பின்னரே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
 

விசித்ரா கூறிய இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலர் அது நந்தமுரி பாலகிருஷ்ணா தான் என கூறி வந்தனர். இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தி பாலகிருஷ்ணா குறித்து கூறியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Ajithkumar: உன் பணம் நீயே வச்சிக்கோ.. மன்னிக்காத விஜயகாந்த்! சட்டையை கழட்டி கேப்டனை கண் கலங்க வைத்த அஜித்!

disco shanthi

இந்த பேட்டியில் ... "விசித்ராவிடம் நடந்து கொண்டது போல் என்னிடம் யாராவது தவறாக நடந்து கொண்டிருந்தால், செருப்பால் அடித்து இருப்பேன். நாம தைரியமாக இருந்தால் யாரும் நம்மை தவறாக நெருங்க மாட்டார்கள். எனக்கு தெரிந்தவரை விசித்ரா நல்ல தைரியமான பொண்ணு தான், ஆனால் ஏன் அந்த நேரத்தில் பயந்தார் என்று எனக்கு தெரியவில்லை.

விசித்ரா கூறியது பாலகிருஷ்ணாவை தான் என கூறுகிறார்கள். ஆனால் பாலாகிருஷ்ணா ரொம்ப நல்ல மனிதர், நான் சில படங்களில் அவருடைய அப்பா உடனும் நடித்துள்ளேன். அதே போல் பாலகிருஷ்ணா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினேன். அப்போது எனக்கு, டான்ஸ் சொல்லி கொடுத்த டான்ஸ் மாஸ்டரைப்பார்த்து பயமாக இருந்ததால், நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அப்போது பாலகிருஷ்ணாதான் பயப்புடாதீங்க என தைரியம் கொடுத்தார்.அதே போல, ஓட்டலுக்கு செல்ல வண்டி கொடுக்கப்படாததால், படப்பிடிப்பு நடந்த அந்த ஐந்து நாளும் என்னையும், என் மேக்கப் மேனையும் ஓட்டலில் பத்திரமாக இறக்கி விட்டு செல்வார். எனவே நான் பார்த்தவரை அவர் மிகவும் நல்ல மனம் படைத்த நடிகர். என்னை அந்த ஒரு வாரமும் மிகவும் மரியாதையாக நடத்தினார் என கூறியுள்ளார்.

Ilakkiya Serial: இலக்கியா சீரியலில் இருந்து விலக காரணம் இது தான்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஹீமா பிந்து..!

click me!