இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், MGR - ஜெயலலிதா நடிப்பில் 1970-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் தங்கம்'. இந்த படத்தை மேகலா பிச்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் தயாரித்திருந்தார்.
இந்த சிறப்பு வாய்ந்த படத்தில் இடம்பெற்ற பாடல் பற்றி தான், மறைந்த கவிஞர் வாலி... ஒருமுறை பேசியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்த்து பாடும் காதல் பாட்டு ஒன்றை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன், நான் அளவோடு ரசிப்பவன் என்கிற வார்த்தையை சொல்லி அடுத்த வரியை என்னிடம் எழுதச் சொன்னார். நான் வெற்றிலை - பாக்கு போட்டு அடுத்த வரியை யோசித்தபோது, ஒன்னும் வரவில்லை.
vaali
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த கலைஞர்... "என்னையா வாலி, பாட்டு எழுதுறியா என்று கேட்டார்" . அதற்கு வாலி.. "அளவோடு ரசிப்பவன் என்கிற வரியை கூறி, அடுத்த வரி எனக்கு தோன்றவில்லை என கூறியுள்ளார்". பின்னர் விசு ட்யூனை வாசி என கூறி, எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று அடுத்த வரியை நொடி பொழுதில் கூறினாராம். எனவே இந்த பாட்டு, எம்ஜிஆருக்கு கலைஞர் எழுதிய பாட்டு என மெய் சிலிர்த்து போன வாலி. இந்த வரியை கேட்டதும் அசந்து போய்விட்டேன் என தெரிவித்துள்ளார்.
Sai Pallavi Birthday: சாய் பல்லவி 'தண்டேல்' ஷூட்டிங்கில் செய்த அமர்க்களம்! படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!
Karunanidhi MGR
காரணம், ஒரு மணி நேரம் வெற்றிலை பாக்கு போட்டு யோசித்து என் கன்னம் எல்லாம் விலகி விட்டது. இவர் வந்ததும் எழுதிவிட்டார் என்று. பின்னர் பத்து நாள் கழித்து எம்ஜிஆரை ஸ்டூடியோவில் வாலி பார்த்தபோது, MGR தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், நான் என்ன அண்ணா... ஏதாவது விசேஷமா என்று கேட்டேன், அதற்க்கு MGR 'அளவின்றி கொடுப்பவன் நான்' என்று... என்னைப்பற்றி எழுதி விட்டாயே என்று கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்க்கு வாலி அந்த முத்தத்தை கலைஞருக்கு போய் கொடுங்கள் என்று சொன்னதாக கூற... இதை கேட்டு கலைஞர் சிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.