பிக்பாஸ் சீசன் 1 எப்படி மிகவும் பரபரப்பாகவே இருந்ததோ... அதே போல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் ஓவ்வொரு நாளும் ரணகளமான நாட்களாகவே சென்றது. ஆனால் எதார்த்தம் என்பதை தான், மாயா, பூர்ணிமா, பிரதீப் ஆண்டனி ஆகியோர் தங்களுக்குள்ளேயே ஸ்டேடர்ஜியை புகுத்தி விளையாடியதால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது.
இந்த ரெட் கார்டு விஷயம், கமல்ஹாசனுக்கே பிரச்சனையாக மாறியது. இவரின் செயல் சிறந்த நடுவருக்கான அடையாளம் இல்லை என்பதையும் உணர்த்தியது.
ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், தற்போது சீசன் 8 குறித்த பேச்சு வார்த்தை துவங்கி உள்ளது. குக் வித் கோமாளி முடிந்த கையேடு இதை துவங்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதற்காக ஒரு காதல் ஜோடியை... பிக்பாஸ் குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
சோயாவிடம் ஏற்கனவே விஜய் டிவி குழு பேசிவிட்ட நிலையில்... அவர் மூலம் TTF வாசனையும் அணுகி இருவரையும் ஜோடியாக உள்ளே போட்டு, ஒரு ரொமான்டி படம் ஓட்டும் ஐடியாவில் இப்படி ஒரு பிளான் போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.