தமிழ் சினிமாவில், பிரபல இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்து... பின்னர் இயக்குனராக ப்ரமோஷன் பெற்றவர் அட்லீ. 2013 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய், ஆகியோர் நடித்த 'ராஜா ராணி' படத்தை இயக்கி பிரபலமான அட்லீ, இதைத்தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார்.
சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படத்திற்கு பின்னர், அட்லீ யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் 'புஷ்பா' பட நாயகனான அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் தற்போது அட்லீ நயன்தாராவும் வேண்டாம்... த்ரிஷாவும் வேண்டாம்... என முடிவு செய்துள்ள நிலையில், ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்துள்ள அந்த நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கும் படத்தில், ஹீரோயினாக பிரபல நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.