தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டு வருவதன் முக்கிய காரணங்கள் குறித்த பிரச்சனை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுத்திகிறது.
இதை தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 28 நாட்களுக்கு உள்ளாகவே, ஓடிடி-யில் வெளியாகி விடுவதன் காரணமாக, திரையரங்கில் திரைப்படத்தை வந்து பார்க்க மக்கள் விரும்புவதில்லை என்றும், எனவே ஒரு திரைப்படம்... திரையரங்கில் வெளியாகி ஓடிடியில் வெளியாகும் கால அவகாசத்தை 8 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தாத பட்சத்தில் திரையரங்கை இழுத்து மூடுவோம் என பொதுக்குழுவில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பல திரையரங்குகள் மூடப்பட்டு வருவதால் அதிருப்தியில் உள்ள... திரையரங்கு உரிமையாளர்கள், ஓடிடி பிரச்சனையில் மட்டும் சமரசம் இல்லை என்பது கூறுவதால், இன்றைய பொதுக்குழுவில் எப்படிப்பட்ட முடிவு எடுக்கப்படும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.