Jyothika : ஒரு சில சீன் பார்த்ததுக்கே இப்படியா? - கங்குவா படம் குறித்து ஜோதிகா சொன்ன முதல் விமர்சனம் இதோ

First Published May 2, 2024, 2:20 PM IST

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்த ஜோதிகா தன்னுடைய விமர்சனத்தை கூறி இருக்கிறார்.

Jyothika and Suriya

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

kanguva

கங்குவா வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படம் என்பதால் இப்படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த நிலையில், கங்குவா படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார் ஜோதிகா, அதன்படி அப்படத்தின் சில காட்சிகளை மட்டுமே தான் பார்த்ததாக கூறி உள்ள அவர், அதற்கே பிரம்மித்துப் போனதாகவும், தமிழ் சினிமா இதுவரை காணாத ஒரு படமாக கங்குவா இருக்கும் என அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Not Ajith First Choice: அஜித்துக்கு முன்பு 'தீனா' படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான்! யார் தெரியுமா?

Jyothika about kanguva

அதேபோல் சூர்யா பற்றியும் அவரின் உழைப்பு பற்றியும் பேசிய ஜோதிகா, சூர்யா அருமையான ஹீரோ மட்டுமல்ல அருமையான மனிதரும் கூட. அவர் ஒவ்வொரு படத்துக்காகவும் 200 சதவீத உழைப்பை போடுவதாகவும், அவரின் இந்த குணத்தால் தான் அவரை கல்யாணம் செய்துகொண்டேன் என நினைக்கிறேன். நடிப்பில் மட்டுமல்ல கணவனாகவும், என் குழந்தைகளுக்கு அப்பாவாகவும் அவர் 200 சதவீதம் பங்களிப்பை கொடுக்கிறார்.

Jyothika says about suriya

கங்குவா படத்திற்காக நீண்ட நாட்களாக ஒரே ஹேர்ஸ்டைலில் சூர்யா இருப்பதாகவும், அது மட்டும் தான் தனக்கு பிடிக்கவில்லை. அதே ஹேர்ஸ்டைல் உடன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறோம். அதை கட் பண்ணி விட வேண்டும் என்று அந்த பேட்டியில் ஜாலியாக பேசிய ஜோதிகா, தற்போது தனது பெற்றோரை பார்த்துக் கொள்வதற்காக மும்பையில் தங்கி இருப்பதாகவும் விரைவில் சென்னைக்கு வந்துவிடுவோம் எனவும் ஜோதிகா கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Vairamuthu : "என் இதயத்தை அசைத்த உங்கள் வரிகள்".. சீனு ராமசாமியின் புதிய கவிதை தொகுப்பு - வாழ்த்திய வைரமுத்து!

click me!