சுக்கிரன் கிரகம், செல்வம், சுகம், ஆடம்பரம் மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இது ஒரு முக்கியமான கிரகம் ஆகும். இதன்
சுப செல்வாக்கைப் பெற்றால், எந்தவொரு நபரும் ஒரு ராஜாவைப் போல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும்.
இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.31க்கு மீன ராசிக்கு சுக்கிரன் மாறுகிறார். ஏப்ரல் 24 இரவு 23:44 வரை மீனத்தில் இருப்பார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். வாருங்கள், அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளலாம்..
கடகம்: சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் பல வித நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். உயர் பதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் அதிஷ்டம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
துலாம்: சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் அதிகப்படியான பலன்களை பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கோ நல்ல வேலை கிடைக்கும். திருமணம் முடியாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
விருச்சிகம்: சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக அமையும். குடும்பத்தில் அமைதி சூழல் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வீர்கள்.
மீனம்: சுக்கிரன் பெயர்ச்சி இந்த ராசியில் தான் நடக்கவுள்ளதால் இவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நேரம் இவர்களுக்கு இருப்பதால், செல்வச் செழிப்பு, பொருள், மகிழ்ச்சி மற்றும் இன்பம் ஆகியவற்றை அனுபவிப்பார்கள்.