தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான பணிகள் துவங்கிய போதும் இன்னும் முடிவடையவில்லை. இதற்கு காரணம் நிதி பற்றாக்குறை என்றே சொல்லப்படுகிறது. கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட், திரைப்படம் என பல வழிகளில் பணம் புரட்ட விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் முயன்ற போதிலும்... நினைத்தப்படும் எடுத்தும் கைகூடவில்லை.
அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.50 லட்சம் தொகையை... தன்னுடைய சொந்த வைப்பு நிதியில் இருந்து வழங்கியுள்ளார். இந்த தகவலை நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள், நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடங்குவதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்தில் இருந்து, ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் மற்றும் பொருளாளர் திரு.கார்த்தி அவர்களிடம் வழங்கினார். அவர்களுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளனர்.
Saamaniyan: ஒருவழியா ராமராஜனின் 'சாமானியன்' படத்திற்கு விடிவு வந்தாச்சு! ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!