சூப்பர் உமனாக மாறிவரும் கதாநாயகிகள்! காஜல் அகர்வாலை தொடர்ந்து... தனுஷ் பட நாயகி சம்யுக்தா எடுக்கும் ரிஸ்க்!

First Published Feb 12, 2024, 12:01 PM IST

சமீப காலமாக, சவாலான கதைக்களத்தை கூட துணிச்சலாக நடிக்கும் ஹீரோயின்கள் சில பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் சம்யுக்தாவின் செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

குதிரை ஏற்றம் என்பது பார்ப்பதற்கு மிகவும் எளிமையான பயிற்சியாக தெரிந்தாலும், முறையாக பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே குதிரைகளை சமாளிக்கவும், அமர்ந்து ஓட்டைவம்... அதில் இருந்து இறங்கவும் தெரியும். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிக்க முறையாக குதிரை ஏற்றம் பயிற்சி பெற்று நடித்தார்.
 

இவரை தொடர்ந்து தனுஷின் வாத்தி பட நாயகியும் ரிஸ்க் எடுத்து குதிரை ஏற்றம் கற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் நிகிலின் இருபதாவது படமான 'சுயம்பு'வில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அவரின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் என கூறப்படுகிறது.  

உயிரும் உலகமும் நீங்களே.. மகன்களோடு சில்லென்ற பயணம் - கியூட் வீடியோ வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்!
 

அவருடன் நடிகை சம்யுக்தாவும் சில சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதற்காக குதிரையேற்றம் கற்கும் பயணத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எனது அடுத்த படமான 'சுயம்பு'வுக்காக நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுப் பயணம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் குதிரையுடன் இணக்கமாக பழகி இந்தப் பயணத்தை கற்று வருகிறேன். இதற்காக ஒரு குழுவாக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவது அழகாகவும் இருக்கிறது" என்றார்.  சம்யுக்தா தமிழில் தனுஷுக்கு ஜோடியாக வாத்தி படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உயர்தரமான தயாரிப்புடன் 'சுயம்பு' படம் உருவாகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். எம் பிரபாகரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நிகில் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் லட்சங்களில் சம்பாதிக்கும் நடிகை சிம்ரன்.. ஆனா கொஞ்சம் காஸ்ட்லி தான்..
 

click me!