விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, 'கிழக்கு வாசல்' தொடர் துவங்கி ஒருவருடம் கூட ஆகாத நிலையில், தற்போது அதிரடியாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்த போதிலும், திடீர் என நிறைவடைவதன் காரணம் TRP ரேட்டிங் மிகவும் குறைவாக கிடைத்து வருவது தான் என கூறப்படுகிறது.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சிந்துஷாம், அருண்குமார் ராஜன், அஸ்வினி ராதாகிருஷ்ணா, பிரவீன் தேவசகாயம், ரோஜா ஸ்ரீ , ஆனந்தபாபு, போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான... குடும்ப நாடகமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை, நடிகை ராதிகா தன்னுடைய ரேடான் நிறுவனம் மூலம் தயாரித்துவந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மாவின் கதாபாத்திரம் சீரியலில் இடம்பெறவில்லை.
அந்த அறிக்கையில்... "மிகவும் கனத்த இதயத்துடன் இந்த தகவலை கூறுகிறேன். விரைவில் 'கிழக்கு வாசல்' தொடர் முடிவுக்கு வர உள்ளது. எனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதமாக நான் இந்த தொடரில் நடிக்க முடியாமல் போனது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் என் நன்றி. என்னுடைய வாழ்க்கையில் இது மறக்க முடியாத பயணம் என தெரிவித்துளளார். இந்த அறிக்கையை தொடர்ந்து, ரசிகர்கள்... மிகவும் பதட்டத்துடன் என்ன ஆச்சு என ரசிகர்கள் அக்கறையோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சீரியலில் கடைசி நாள் படப்பிடிப்பில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.