பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, 80 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் நடந்த நிலையில், ஹவுஸ் மேட்ஸ் சண்டை போடுவதை மறந்து... சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.
ப்ரீஸ் டாஸ்கிங் போது... போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள், பெற்றோர், சகோதர, சகோதரி என பலர் வந்த போதும்... ரவீனாவின் அம்மா மட்டும் உடல்நல பிரச்சனை காரணமாக வரவில்லை என கூறப்பட்டது. ரவீனாவின் அம்மாவுக்கு பதிலாக அவரின் சித்தி மற்றும் அவரின் மகன் உள்ளே வந்தனர். ரவீனாவின் விளையாட்டை தனியாக ஆடும் படி சொன்னதோடு, மணியுடன் பழக வேண்டாம் என எச்சரித்து சென்றார்.
இதனை அடுத்து ஸ்டோர் ரூமில் சென்று பாருங்கள் உங்களுடைய குழப்பத்திற்கு ஒரு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று கமல் கூற.... உடனே ரவீனா ஸ்டோர் ரூம் சென்று பார்த்தபோது அங்கு அவருடைய அம்மா இருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். ரவீனாவை பார்த்து அவருடைய அம்மாவும் ஆனந்த கண்ணீர் வடிக்க, அவருடைய கண்களை ரவீனா துடைத்து விட்டார். பின்னர் சாக்லேட் கொடுத்து, சாப்பாடு ஊட்டி விட்டு ரவீனாவின் அம்மா பாசத்தை பொழிந்தாலும்... மணி விஷயத்தை எப்படி எடுத்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D