Rasi Palan : தப்பி தவறி கூட இந்த ராசிகளிடம் பகை வச்சிக்காதீங்க.. அதுதான் உங்களுக்கு நல்லது!

First Published Apr 16, 2024, 10:00 PM IST

நண்பர்களை உருவாக்குவது கூட கடினம். ஆனால், எதிரிகளை உருவாக்குவது ரொம்பவே எளிது என்று சொல்லலாம். இந்நிலையில், எக்காரணம் கொண்டும் இந்த ராசிக்காரர்களுடன் மட்டும் பகைமை கொள்ளாதீர்கள் என்று ஜோதிடம் சொல்லுகிறது. அது ஏன்..?

பொதுவாகவே, எல்லாருடனும் நட்பாக இருப்பது மிகவும் கடினம். அப்படி ஒருபோதும் இருக்கவே முடியாது. அதுபோல், குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் மட்டும் பகை இருக்கவே கூடாது. அது ஏன் என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ரிஷபம்: இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். குறிப்பாக, அவர்களின் கோபத்தை ஒருபோதும் தூண்டவே கூடாது. மீறினால் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவீர்கள். மேலும் இவர்கள் ஒரு எதிரியாக அவர்கள் உங்களை வரவேற்கிறார்கள், ஆனால் ஒரு இறுக்கமான புன்னகையுடன் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

கடகம்: இவர்கள் கோபமடைந்தால், உங்கள் மீது உணர்ச்சி அம்பு எறிவார்கள். இதனால் நீங்கள் அவர்களுக்கு எதிரியாகிவிடுவீர்கள். மேலும், இவர்கள் உங்களைப் பற்றி வதந்திகளைப் பரப்புவார்கள். அதுமட்டுமின்றி, இவர்களின் வார்த்தைகள் விஷமாகும். இந்த ராசிக்காரர்கள் உங்களுக்கு எதிரியாக மாறினால் நீங்கள் ரொம்பவே வருத்தப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்: இவர்கள் ஆக்ரோஷமாக கோபப்படுவார்கள். இவர்கள்  உங்களை எப்போதுமே எதிரியாகவே நடத்துவார்கள். இவர்கள் உங்களை அவ்வளவு எளிதில் போக விடமாட்டார்கள். மேலும், இவர்கள் எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.

click me!