தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம் சரண் உடன் அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.
இதுதவிர ராம்சரணின் 17-வது படம் குறித்த அறிவிப்பும் அண்மையில் வெளியானது. அப்படத்தை சுகுமார் இயக்க உள்ளார். தற்போது புஷ்பா 2 பட பணிகளில் பிசியாக இருக்கும் சுகுமார், அப்படத்தை முடித்த பின்னர் ராம்சரண் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ராம்சரணும், சுகுமாரும் இணைந்து பணியாற்றிய ரங்கஸ்தலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இப்படி செம்ம பிசியான நடிகராக வலம் வரும் ராம்சரண், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, தன் மனைவி உபாசனா மற்றும் மகள் கிளின் காராவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறையினர் அவர்களை பத்திரமாக அழைத்து சென்றனர். சாமி தரிசனம் முடிந்த பின்னர் சிறப்பு பிரசாதங்களும் ராம்சரணுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... Game Changer : ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங்... ராம்சரண் ரசிகர்களை மெர்சலாக்கிய கேம் சேஞ்சர் பர்ஸ்ட் சிங்கிள்