Aishwarya Rajinikanth Marriage
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ஏற்கனவே பிரபல நடிகர் ஒருவரின் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தனுஷ் உடன் நெருக்கம் காட்டி உள்ளார். இது குறித்த தகவல் மீடியாக்களில் கசிந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தே தனுஷின் தந்தைக்கு போன் போட்டு திருமணம் குறித்து பேசி, இவர்களின் காதலை திருமணம் வரை கொண்டு சென்றார்.
மிகவும் சந்தோஷமாக துவங்கிய தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை, வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில்... இருவருக்கும் யாத்ரா - லிங்கா என்கிற இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். இந்நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷ் உடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாக துவங்கியது.
மேலும் தனுஷ் வீட்டிலும், ரஜினிகாந்த் தரப்பிலும் மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட்டதாக கூறப்பட்டது. எனவே மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரும் உறுதி செய்தார்.
தனுஷை உருகி உருகி காதலித்து மட்டும் இன்றி, அவன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆணிவேராக இருந்தவர் என்றால் அது ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யாவுக்கு, தனுஷ் மீது இப்படி கோவம் வர காரணம், சில நடிகைகளுடன் தனுஷ் காட்டிய நெருக்கம் என கூறப்படுகிறது. மற்ற விஷயங்களை அவர் சகித்து கொண்ட போதிலும், தனுஷ்... மீண்டும் மீண்டும் செய்த சில விஷயங்களே வெறுப்பாக மாறி விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளது.