ராதிகா கர்ப்பம்.. இது என்னடா கோபிக்கு வந்த சோதனை! தாத்தாவான பின் மீண்டும் அப்பாவா? பாக்கியலட்சுமி அப்டேட்!

First Published Apr 18, 2024, 12:22 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கிய லட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. யூகிக்க முடியாத கதைக்களத்துடனும், ஆண்கள் இல்லாமல் பெண்களால் தனித்து வாழ முடியும் என வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

12-ஆம் வகுப்பு படித்து முடித்ததுமே, கோபியை பாக்கியாவுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் அவரின் பெற்றோர். பாக்கியா இளம் வயதிலேயே மூன்று குழந்தைகளுக்கு தாயானது மட்டும் இன்றி அந்த குடும்பத்திற்காக ஓடாக உழைக்கிறார். ஆனால், பாக்கியாவை வற்புறுத்தலின் அடிப்படையிலேயே கோபி திருமணம் செய்து கொள்வதால், அவருக்கு பாக்கியா மீது காதல் இல்லாமல் கடைமை என்று மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

Ninaithen Vanthaai: எழிலுக்குள் இருக்கும் காதல்.! சுடருக்குள் ஏற்பட்ட மாற்றம் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
 

baakiyalakshmi

இப்படியே செல்லும் கோபியின் வாழ்க்கையில், திடீர் என வருபவர் தான் ராதிகா. இவர் கோபியின் முன்னாள் காதலியும் கூட, ராதிகா அவரின் கணவருடன் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் கோபி... பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். 
 

பின்னர் கோபி மற்றும் ராதிகாவால் பாக்கியாவுக்கு பல பிரச்சனைகள் வந்த போதும்... அவை அனைத்தையும் தைரியமாக எதிர்த்து போராடினார். வாழ்க்கையிலும் ஜெயித்து, பிஸ்னஸிலும் ஜெயித்துள்ளார். 

Priyamani About Husband: லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு! கணவர் சொன்ன வார்த்தை... மனம் திறந்த நடிகை பிரியாமணி!

இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே எழிலின் குழந்தை மற்றும் செழியனின் குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு கோபி தாத்தாவாகிவிட்ட நிலையில், ராதிகா மீண்டும் கர்ப்பமாக உள்ளது போல் கதைக்களம் இடம்பெற உள்ளது குறித்த, போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பிள்ளைகளுக்கு திருமணம் ஆன பின் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்ட போது... நெட்டிசன்கள் இது சீரியல் என்றும் பார்க்காமல் ட்ரோல் செய்த நிலையில், கண்டிப்பாக தாத்தாவான பின்னர் தந்தையாகும் கோபியையும் வெச்சு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்! சர்ச்சைக்கு குறித்து முதல் முறையாக பேசிய இந்திராஜா கணவர் கார்த்தி
 

click me!