விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. யூகிக்க முடியாத கதைக்களத்துடனும், ஆண்கள் இல்லாமல் பெண்களால் தனித்து வாழ முடியும் என வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
baakiyalakshmi
இப்படியே செல்லும் கோபியின் வாழ்க்கையில், திடீர் என வருபவர் தான் ராதிகா. இவர் கோபியின் முன்னாள் காதலியும் கூட, ராதிகா அவரின் கணவருடன் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் கோபி... பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே எழிலின் குழந்தை மற்றும் செழியனின் குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு கோபி தாத்தாவாகிவிட்ட நிலையில், ராதிகா மீண்டும் கர்ப்பமாக உள்ளது போல் கதைக்களம் இடம்பெற உள்ளது குறித்த, போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.