Priyamani About Husband: லவ் ஜிஹாத் குற்றச்சாட்டு! கணவர் சொன்ன வார்த்தை... மனம் திறந்த நடிகை பிரியாமணி!

First Published Apr 17, 2024, 10:40 PM IST

லவ் ஜிகாத் குற்றச்சாட்டு குறித்தும், தன்னுடைய சினிமா பயணத்திற்கு கணவர் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறார் என நடிகை பிரியாமணி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
 

தெலுங்கு திரை உலகில், நடிகையாக 2003 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியாமணி. இதைத் தொடர்ந்து, 'கண்களால் கைது செய்' திரைப்படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். ரொமான்டிக் திரில்லர் கதை அம்சத்தில் உருவான இந்த திரைப்படத்தை, இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க பிரியாமணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
 

அந்த வகையில் தனுஷுக்கு ஜோடியாக 'அது ஒரு கனாக்காலம்' ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக 'மது' போன்ற படங்களில் நடித்தார். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.

Vivek: நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்! மரங்கள் நட்டு அஞ்சலி செலுத்திய நடிகர் வைபவ்..!
 

இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் படு பிஸியான ஹீரோயினாக மாறினார் பிரியாமணி. எனினும் கமல், விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், பரத், விஷால், போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
 

தென்னிந்திய திரை உலகில் அனைவராலும் அறியப்படும் நடிகையாக இருக்கும் பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் ஒற்றை பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். இதைத் தொடர்ந்து சில வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த 'தி ஃபேமிலி மேன் 2 ' சீரிஸ் பிரியா மணிக்கு பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்! சர்ச்சைக்கு குறித்து முதல் முறையாக பேசிய இந்திராஜா கணவர் கார்த்தி
 

அதே போல் சமீபத்தில் வெளியான 'மைதான்' படத்திலும் அஜய் தேவ்கனுக்கு நடிக்கும் ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

இந்நிலையில், இவருடைய சொந்த வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை பிரியாமணி. திரை உலக வாழ்க்கையில் எந்த ஒரு சர்ச்சையிலும் இவர் சிக்காத நிலையில் இவரது பர்சனல் வாழ்க்கை பேசுபொருளாக மாறியது. பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்கிற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பிரியாமணி நடிக்க மாட்டார் என பலரும் கூறிய நிலையில், அது போன்ற வதந்திகளை தகர்த்தெறிந்து மீண்டும் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!
 

எனினும் இவரது திருமணத்தை நெட்டிசன்கள் சிலர் லவ் ஜிகாத் என தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து பதிலடி கொடுத்துள்ளார் பிரியாமணி. அதாவது எங்களது திருமணத்தை பலர் லவ் ஜிகாத்  என விமர்சிக்கின்றனர். ஒருவரின் மத நம்பிக்கையை பயங்கரவாதம் அல்லது தவறான சித்தாந்தத்துடன் ஒப்பிடுவது மிகவும் தவறான விஷயம் என்றும், இஸ்லாமியர்கள் அனைவரையும் ஐஎஸ் ஐஎஸ் அல்லது ஜிகாத்துடன் ஒப்பிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 

இதை தொடர்ந்து தனது கணவர் திரையுலக வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதையும் பகிர்ந்துள்ள பிரியாமணி, உனக்கு பிடித்த நடிப்பில் நீ முழுமையாக கவனம் செலுத்து என கூறி விட்டு, தன்னுடைய பொறுப்பில் இருந்து என்னையும், குடும்பத்தியும் அவரே கவனித்து கொள்வதாகவும் . தன்னுடைய வெற்றிக்கு அவர் தான் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
 

click me!