தெலுங்கு திரை உலகில், நடிகையாக 2003 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியாமணி. இதைத் தொடர்ந்து, 'கண்களால் கைது செய்' திரைப்படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். ரொமான்டிக் திரில்லர் கதை அம்சத்தில் உருவான இந்த திரைப்படத்தை, இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க பிரியாமணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் படு பிஸியான ஹீரோயினாக மாறினார் பிரியாமணி. எனினும் கமல், விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், பரத், விஷால், போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதே போல் சமீபத்தில் வெளியான 'மைதான்' படத்திலும் அஜய் தேவ்கனுக்கு நடிக்கும் ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இவருடைய சொந்த வாழ்க்கை குறித்து தற்போது மனம் திறந்து பேசி உள்ளார் நடிகை பிரியாமணி. திரை உலக வாழ்க்கையில் எந்த ஒரு சர்ச்சையிலும் இவர் சிக்காத நிலையில் இவரது பர்சனல் வாழ்க்கை பேசுபொருளாக மாறியது. பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்கிற இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பிரியாமணி நடிக்க மாட்டார் என பலரும் கூறிய நிலையில், அது போன்ற வதந்திகளை தகர்த்தெறிந்து மீண்டும் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!
எனினும் இவரது திருமணத்தை நெட்டிசன்கள் சிலர் லவ் ஜிகாத் என தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இது குறித்து பதிலடி கொடுத்துள்ளார் பிரியாமணி. அதாவது எங்களது திருமணத்தை பலர் லவ் ஜிகாத் என விமர்சிக்கின்றனர். ஒருவரின் மத நம்பிக்கையை பயங்கரவாதம் அல்லது தவறான சித்தாந்தத்துடன் ஒப்பிடுவது மிகவும் தவறான விஷயம் என்றும், இஸ்லாமியர்கள் அனைவரையும் ஐஎஸ் ஐஎஸ் அல்லது ஜிகாத்துடன் ஒப்பிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.